உயிர்கொடுத்து நினைத்ததைச் சாதித்த தமிழர்கள்……
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த 22ம் தேதி நடந்த 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து , தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது.