தமிழ் மக்கள் போராடக்கூடாது, அவர்கள் விழுந்தே கிடக்கவேண்டும் என்கின்றதான ஒரு அரசியலை மேற்குலகம் மேற்கொண்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொண்ணம்பலம் குற்றம் சுமத்துகின்றார்.
சுவிட்சலாந்தில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அந்த அரசினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே கஜேந்திரக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகளின் தமிழர்களின் போராட்டத்தை நசுக்க மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் குறித்து மிகவும் விழிப்பான இருக்க வேண்டும் என்றும் சுவிஸர்லாந்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொண்ணம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.