பிபா என்று அழைக்கப்படும் உலக கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் 21 வது உலகக்கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் ரஷ்சியாவில் நடைபெற்று வருகின்றது .போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அடித்தவர்கள் பட்டியலில் 84 கோல்களுடன் அடித்து ஹங்கேரி வீரர் பெரென்ஸ் புஸ்காஸ் உடன் 2-வது இடத்தை பகிர்ந்திருந்தார்.
நேற்று நடைபெற்ற மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த கோல் மூலம் ரொனால்டோவின் கோல் 85 ஆக உயர்ந்து. அத்துடன் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஈரானைச் சேர்ந்த அலி டயெய் 109 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.