மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 19ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை இடம்பெறுகின்றது.
இந்த நிலையில், நேற்று முதல் குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் ‘சதொச’ வளாகத்தில் இருந்து உரிய அனுமதியுடன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அப்புறப்படுத்தபட்டு வருகின்றது.
இதன்போது, மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் குறித்த வளாகத்தின் நுழைவு பகுதியில் இருந்து ஒரு முழு மனித எழும்பு கூடு இன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்பு சிறிய தோற்றம் உடைய மனித எச்சமாக காணப்படுகின்ற போதும் அது தொடர்பான உண்மைத்தன்மையும் மறைவாகவே உள்ளது.
இதேவேளை, தொடர்சியாக ஆங்காங்கே சிறு சிறு மனித எச்சங்கள் காணப்பட்டாலும் இன்று அகழ்தெடுக்கப்பட்ட முழு அளவிலான எலும்பு கூடு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.