இலங்கை அணிக்கு மேலும் தனது உதவி தேவையான இருக்குமாக இருந்தால் அதனை பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக டில்சான் தெரிவித்துள்ளார்.
தான் 2019இலேயே ஓய்வு பெற திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அழுத்தங்கள் காரணமாகவே தான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டி வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் தற்போது இலங்கை அணி முகம்கொடுத்துள்ள நிலைமையிலிருந்து விடுபட தேவையான உதவிகளை வழங்க தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை அணி இவ்வாறாக விழும் நிலைமைக்கு தள்ளப்படுமென தான் கனவிலும் எதிர்பார்த்ததில்லையெனவும் இதனால் தனது உதவியை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.