இரண்டு கால்களையும் ஒரு கண்ணையும் விடுதலை போரில் இழந்து வறுமையில் வாடும் முன்னாள் போராளி ! உதவிக்கரம் நீட்டுங்கள்
உதவும் உள்ளங்களின் கவனத்திற்கு!!!
ஆகக் குறைந்தது ஒரு பகிர்வின் மூலமாகவேனும் தகவலை உதவும் உள்ளம் உடையோர்க்கு தெரியப்படுத்துவோம்.
இவர் மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்தவர். பிரதான வீதியில் சைக்கிள் கடை வைத்திருக்கின்றார்.
2 காலையும் ஒரு கண்ணையும் வன்னியில் ஜெயந்தன் படையணியில் இருந்த போது இழந்துள்ளார்.
சொந்தப் பெயர் குணம், ஜெயந்தன் படையணியில் மாறன் எனும் பெயரில் இருந்துள்ளார்.
தற்போது அரச உதவியாக மாதம் 3 ஆயிரம் கிடைக்கின்றது.
2 பெண்பிள்ளைகள் ஊரிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள். இவர் சிறு உதவி ஒன்றை எதிர்பார்க்கின்றார்.
ஒரு சிறிய காற்றளுத்தியும் சில சைக்கிள் உதிரிப்பாகங்களும் இருந்தால் தனது வருமானத்தை அதிகரித்து பிள்ளைகளை வளர்க்க முடியும் என்று கூறுகின்றார்.