வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்ததுடன், ஆலயக்குருக்கள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன் படி இக்கோயில் விடுவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை திங்கட்கிழமை வலிவடக்கில் 60 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. இதற்குள் வசாவிளான் ஞானவைரவர் ஆலயமும் விடுவிக்கப்பட்டது. இதன்படி மயிலிட்டித்துறை வடக்கு, மயிலிட்டி, ஒட்டகப்புலம், பலாலி தெற்கு மற்றும் பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டன. இப்பகுதியில் இராணுவத்தினர் முகாம்களின் முட்கம்பி வேலிகள் அகற்றி வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் மக்கள் காணிகளுக்குள் செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.