இந்த வருடம் கல்வி பொது தராதர உயர் தரத்தில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .அடுத்த மாதம் இடம்பெற உள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவியை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த, உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் காரணம் இதுவரை தெரியவில்லை எனவே பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.