தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை யும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டனர்.
வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் முன்பாக, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40பேர் வரையில் திரண்டிருந்தனர்.
எனது மகனுக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கைதான இளைஞன் ஒருவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்தார்.
வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடையதாக அவர் கைத்தொலை பேசியில் பதிந்துள்ள தகவல்களை தந்தை யிடம் காண்பித்தனர். தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தந்தை பொலிஸாரிடம் கூறினார்.
அங்கு திரண்டிருந்த உறவினர்கள் பலர், கைதானவர்களுக்கு குற்றச் செயல்களுடன் தொடர்பு இல்லை என்றே தெரிவித்தனர். அவர்களை விடுவிக்குமாறும் கோரினர்.