ஈழத் தமிழர் பெருமையை உலகறியச் செய்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக தமிழ்துறை மாணவி சிந்துயா தவராசா. இவர் மியன்மார் நாட்டில் இடம்பெற்ற அனைத்துலக”பேசு தமிழா பேசு” நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பான பேச்சு ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் மொறீசியஸ் மியன்மார் இந்தியா மலேசியா அவுஸ்ரேலியா மற்றும் ஈழத்திலிருந்து மொத்தமாக 16போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முதலாவது சுற்றில் வெற்றியடைந்து இரண்டாவது சுற்றில் நுளைந்து “இளம் தமிழ்ச் சுடர் விருதினைப் பெற்று சாதனை படைத்தார் சிந்துயா தவராசா.
இந்தச் சாதனை ஈழத்தமிழனுக்கு கிடைத்த சாதனை சுத்தமான அறத் தமிழிச்சியாய் திறமைகள் சூடி புரட்சியாய் வாழ சிந்துயாவுக்கு எழுச்சி கனிந்த வாழ்த்துக்கள். அவர் மேலும் பல சாதனை படைத்து தமிழை வளர்க்க வாழ்த்துவோம் நண்பர்களே!.
அவரது பேச்சையும் தந்தால்தானே அவரது சாதனையைச் சரியாகப் புரியமுடியும்?