முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (01) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது கலந்துயாடப்பட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னரும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக பரஸ்பரம் கூறிய நிமிடங்கள் திக் திக் என அமைந்ததாக கூறப்படுகின்றது. அரசியலில் மோதும் எதிரும் புதிருமான இவர்கள் சந்திப்பு குறித்து பல விடயங்கள் வெளியில் வரவில்லை.