கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதியில் உள்ள குடியிருப்புக்கருகில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புக்களை நோக்கி நேற்று நள்ளிரவில் நகர்ந்த முதலை, வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கோழிகளை உண்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களையும் அச்சுறுத்தியுள்ளது.
கிளிநொச்சி நகரில் உள்ள வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்திய குறித்த முதலையை நீண்ட முயற்சியின் பின்னர் பிடித்து கட்டியுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் சம்பவம் தொடர்பில் அறிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முதலையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.