புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்ற மக்களுக்கு மீண்டும் கொழும்பு திரும்பி வர இன்று (16) முதல் போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு சுபவேளை சம்பிரதாயங்களின் போது குறைவாக காணப்பட்ட அரச போக்குவரத்துச் சேவை தற்பொழுது படிப்படியாக சீரடைந்து வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
குறுகிய தூர மற்றும் நீண்ட தூரம் என்பவற்றுக்கான போக்குவரத்துச் சேவைகளுக்கு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இ.போ.ச. மேலும் கூறியுள்ளது.
இதேவேளை, ரயில் சேவைகளும் வழமை போன்று செயற்படுவதாகவும் ரயில்வே போக்குவத்துக்கான பிரதிப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.